காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

காவிரி நதிநீரை பங்கிடுவது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு, அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 14 காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. இந்தநிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 15ஆவது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நான்கு மாநில பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version