இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரி ஒழுங்காற்று குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில் நடைபெற்றும் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கு முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதனடிப்படையில் இந்த ஒழுங்காற்று கூட்டம் அடுத்த உத்தரவுகளை பிறப்பிக்கும்.

Exit mobile version