பொள்ளாச்சியில் புலிக்கு இரையான கால்நடைகள் : பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தோட்டத்தில் புகுந்த புலி ஒன்று, ஆடு மற்றும் கன்றுக்குட்டியை கொன்றதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள சர்க்கார்பதியில், சங்கர் என்ற விவசாயியின் தோட்டத்தில் புகுந்த புலி ஒன்று, மாட்டுத் தொழுவத்தில் கட்டியிருந்த ஐந்து ஆட்டுக் குட்டிகள், ஒரு கன்றுக்குட்டி ஆகியவற்றை கடித்துக் குதறியது.

கால்நடைகளின் சத்தம் கேட்டு தொழிலாளி வந்த போது, ஆடுகளும், கன்றுக் குட்டியும் பரிதாபமாக உயிரிழந்திருந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும், புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version