ஜூன் 25 ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் கால்நடை கண்காட்சி

ஒட்டன்சத்திரத்தில் கால்நடை கண்காட்சிக்காக முன்கூட்டியே மாடுகள் மற்றும் குதிரைகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூரில் அமைந்துள்ள உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 25 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை கால்நடை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் மற்றும் குதிரைகள் கலந்து கொள்ள உள்ளன. கண்காட்சி துவங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், ஏராளமான மாடுகள், சிறிய மற்றும் பெரிய ரக குதிரைகள் வந்த வண்ணம் உள்ளன.

Exit mobile version