ஈரோட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் கால்நடை அலங்கார பொருட்களின் விற்பனை

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஈரோட்டில் கால்நடை அலங்கார பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

மாட்டுப்பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த தினத்தில் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அவைகளுக்கு பொங்கல் படைத்து வழிபடுவர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாரச்சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கால்நடைகளை அலங்கரிக்க தேவையான மணிகள், கயிறுகள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Exit mobile version