வறட்சி காரணமாக கால்நடைகள் வியாபாரம் தேக்கம்

வறட்சி காரணமாக கால்நடைகள் வியாபாரம் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தலவாகுளம் கிராமத்தில் வாரந்தோறும் நடைபெறும் கால்நடை சந்தைக்கு மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர், புல் மற்றும் தீவனம் உள்ளிட்டவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்நடை வியாபாரம் தேக்கமடைந்துள்ளது. மழை அதிகரித்தால் மட்டுமே கால்நடை விற்பனை அதிகமாகும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version