உதயநிதி ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கடந்த 23-ஆம் தேதி தி.மு.க வேட்பாளர் கெளதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முக்கிய வழித்தடத்தில், வாகனத்தை நிறுத்தி பரப்புரை மேற்கொண்டதில் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் முகிலனின் புகாரின் பேரில், உதயநிதி ஸ்டாலின் மற்றும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் மீது கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version