அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு

அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 17 இயக்கம் சார்பில் கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான தகவல்களை பரப்பியதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருமுருகன் காந்தி, பெரியசாமி, டைசன், அருள் முருகன் ஆகியோர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version