திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பகுஜன் சமாஜ் கட்சியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து தரம்தாழ்ந்து பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் பகுஜன் சமாஜ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஆர் எஸ் பாரதி மீது   வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version