போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு

காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார். தனது வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணியும், நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார். அப்போது, திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி, காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவத்தால், வேட்பு மனுத்தாக்கலின் போது சலசலசலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version