ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில் தாம்பரம் நகர தலைவர் பி.எஸ். ரகுராமன் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் கமலஹாசன் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். மத வன்முறையை தூண்டும் வகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல் பேசியது வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்துக்களை இழிவு படுத்தும் விதமாக பேசியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version