கரூரில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கரூரில், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்த முகாமில், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். முகாமில், அசோக் லைலேண்ட், டாடா மோட்டார்ஸ், டி.வி.எஸ்., பஜாஜ், ஜே.கே.டயர்ஸ், சக்தி ஆட்டோ லிமிட்டட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் இருபதாயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

Exit mobile version