கார் ஓட்டுனரை கட்டிப்போட்டு காரை கடத்தி சென்ற மர்ம கும்பல்

செங்கல்பட்டு அருகே வாடகை கார் ஓட்டுனரின் கை கால்களை கட்டிப்போட்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல்  காரை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சிலர் வாடகை கார் புக் செய்து அதில் பயணித்துள்ளனர். இந்த கார் திருக்கழுகுன்றம் வழியாக கொத்தமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணித்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட்டுனரின் கால், கைகளை கட்டிப்போட்டு காரை கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து ஓட்டுனர் ஐசக் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version