நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியவிபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், ருத்ரவரம் கிராமத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், காரில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்று கொண்டிருந்தனர். ரேனிகுண்டா – குருவராஜூபள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அதிகாலை நேரத்தில் கார் டிரைவருக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே விபத்து ஏற்பட்டது எனத் தெரியவந்தது.

Exit mobile version