சென்னிமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தன்று, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்த சஷ்டிக் கவசம் அரங்கேற்றப் பட்டதாகக் கூறப்படும் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், தைப்பூசத் திருவிழா, கடந்த மாதம் 31-ம் ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Exit mobile version