திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேர் திருவிழா

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேசுவரர் கோயில் பங்குனி திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி திருவானைக்காவலில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 31ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வைபவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனுடன், ஜம்புகேசுவரரும் மற்றொரு தேரில் அகிலாண்டேசுவரி தாயாரும் எழுந்தருளினர்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன்செல்ல சிவ, சிவா என்று பக்தி பரவச முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version