திருப்பூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த கார்

திருப்பூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த காரில் பயணித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூரைச் சேர்ந்த சென்ட்ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வத்தலகுண்டு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. கிணற்றில் 5 அடி மட்டுமே நீர் இருந்தநிலையில் உடனடியாக சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த காரையும் வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்டு அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version