உதகையில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது கார் மோதி விபத்து

உதகையில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது கார் மோதிய விபத்தில், இருவரும் கால்வாய்க்குள் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகையிலிருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான, சவுத்வீக் வழியாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சாலையின் இடது புறமாக சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, திடீரென்று வலதுபுறமாக சென்றது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது கார் மோதி, தூக்கி வீசப்பட்டதில், இருவரும் அருகில் இருந்த கால்வாயில் சிக்கிக் கொண்டனர்.

பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் பலத்த காயங்களுடன் இருந்த பெண்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாராணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Exit mobile version