சாலையில் தறிக்கெட்டு ஓடிய காரால் விபத்து: 4 பேர் காயம்

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தேர்நிலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை ஓட்டி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் விவேகானந்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version