புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அந்த கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, இருபுறமும் அடுத்தடுத்து வந்த 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு குழந்தைகள் உட்பட 15க்கும் மேற்பட்டோரை, போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version