புதுக்கோட்டை அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து

புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதிய விபத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உட்பட இருவர் பலியாகினர்.

பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் கடந்த 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமானநிலையத்தில் விட்டு விட்டு, அதே காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீரபெருமாள்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் கார் ஓட்டுனர் செல்வம் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.   

Exit mobile version