அதிமுக கூட்டணியின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்

அதிமுக வெற்றிக் கூட்டணியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்று மதுரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். பாலமேடு அருகில் உள்ள மஞ்சள்மலையாண்டி அய்யனார் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ரவிந்திரநாத் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பாலமேடு வரும் வழியில் குமாரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடுவில் துணை முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் பொதுமக்களுக்கும், தமிழ்நாட்டின் பாதுகாப்பு வளர்ச்சிக்கும் உகந்ததாக அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். எதிர்க் கட்சிகளும், எந்த அமைப்புகளும் தொண்டர்களின் இயக்கமான அதிமுகவுக்கு நெருக்கடியை தர முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version