அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியின் சார்பாக விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணன் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்ரமணியனிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

அதேபோல், ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மைதிலியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் காளியப்பன் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் மனுதாக்கல் செய்தார்.

Exit mobile version