புதுச்சேரியில் வரும் 10, 11-ம் தேதிகளில் வேட்பாளர் பெயர் பட்டியல் ஒட்டும் பணி

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன. புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பட்டியல் ஒட்டும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து, அனைத்து இயந்திரங்களும் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து வருகிற 10, 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பட்டியல் ஒட்டும் பணி நடைபெற உள்ளது.

Exit mobile version