பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு பதிலாக மயில்வேல் போட்டியிடுவார் : அதிமுக

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு பதிலாக மயில்வேல் போட்டியிடுவார் என்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், முருகனுக்கு பதிலாக மயில்வேல் என்பவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மயில்வேல் போட்டியிடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Exit mobile version