திமுக தொண்டர் ஒருவரை முதலமைச்சராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

மக்களவை, இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 நாட்களாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குத்தாலம் பகுதியில் மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், எத்தனை நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சி செய்யும் என்று கூறினார். மேலும், திமுக தொண்டர் ஒருவரை முதலமைச்சராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா என்று துணை முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version