காவல்துறையில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதலில் தலையிட முடியாது-உயர் நீதிமன்றம்

நிர்வாக ரீதியாக காவல்துறையில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதலில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த அனிதா, தன்னை எண்ணூர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பணியிட மாறுதல் என்பது தண்டனை அல்ல எனவும், காவல்துறையில் நடைபெறும் பணியிட மாறுதலில் தலையிட்டால் அது ஒட்டுமொத்த நிர்வாக ரீதியான நடவடிக்கையை சீர்குலைத்து விடும் என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version