பிக் பாஸை நடத்தும் கமல் நாட்டை ஆள நினைக்கலாமா? முதலமைச்சர் விமர்சனம்

பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் மக்களின் நிலை கேள்விகுறியாகி விடும் என நடிகர் கமலஹாசனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், குடும்பங்களை சீரழிக்கும் நிகழ்ச்சிகளை கமல் தொகுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களில் வரும் பாடல்களை போல், கமல் தமது படங்களில் சமுதாய நல்லுணர்வை வலியுறுத்தும் பாடல்களை வைத்தது உண்டா? எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version