தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு முகாம்

கலசப்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் பொது மருத்துவ முகாமில் 589 கர்ப்பிணி பெண்களுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்துள்ள கீழ்வன்னியனூர் பகுதியில், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, 589 கர்ப்பிணி பெண்களுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதனையடுத்து, முகாமில், கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஊட்டசத்துக்கள் குறித்து, மருத்துவ அலுவலர் மணிகண்டன் விளக்கமளித்தார். இதில் 700க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Exit mobile version