தாராபுரத்தில் இன்று பிரசார பொதுக்கூட்டம்: பிரதமர், முதலமைச்சர் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

தாராபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பங்கேற்கும் பிரதமர் மோடி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான எல்.முருகன் தலைமை வகிக்கிறார். பிரதமர் மோடி தாராபுரம் வருகையையொட்டி தாராபுரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.

Exit mobile version