மதுரையில் கஜா புயல் சேதம் அதிகம் உள்ள பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்

கஜா புயலால் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் சேதம் அதிகம் உள்ளதால் கணக்கெடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நடராஜன், கஜா புயலால் மேலூர் ,கொட்டாம்பட்டி வாடிப்பட்டி, பகுதியில் சேதம் அதிகம்
ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் வாழை, கரும்பு மற்றும் நெல் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். சேதமடைந்த 28 வீடுகளுக்கும் முழுமையாக சேதமடைந்த 20 வீடுகளுக்கும்
நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

 

Exit mobile version