முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கை, வரும் 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, நோய்த் தொற்று இல்லாத பகுதிகளில் சில பணிகளைத் தொடங்கவும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில், நோய்த்தொற்று தீவிரமாக உள்ள சிவப்பு மண்டலம் தவிர பிற மண்டலங்களில் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும், எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version