மத்திய பிரதேசத்தில் வரும் வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம்!

மத்திய பிரதேசத்தில் வரும் வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், மத்திய பிரதேச பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். ஆனந்திபென் படேல் வரும் புதன்கிழமை, பொறுப்பு ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version