சிஏஏவுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் குறித்து பாஜக மனு

தலைமைச்செயலகத்தில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் பேரணி குறித்து தலைமை செயலாளர் சண்முகத்திடம் மனு அளிக்கப்பட்டது. பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற பேரணியின் நோக்கம் குறித்து தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இல. கணேசன், திமுக தொடர்ந்து இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுக நடத்தும் போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version