புல்புல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் புல்புல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார்.

வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தபோது 24 பர்காணா மாவட்டங்களில் பலத்த பாதிப்பை உண்டாக்கியது. புயல் தொடர்பான நிகழ்வுகளில் 7 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார். அதன்பின் தெற்கு 24 பர்காணா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் மம்தா பானர்ஜி ஆறுதல் தெரிவித்தார்.

Exit mobile version