இடைத்தேர்தல் வாக்குப்பதிவு : ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

காலை 9 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 18 விழுக்காடு வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 13 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரியின் காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியிலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் 18 புள்ளி 5 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 13 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

Exit mobile version