இடைத்தேர்தல் நடைபெரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு பரிசீலனை!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. தற்போது இன்று அந்த வேட்புமனுத் தாக்கல் மீதான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. அதிமுக சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கே.எஸ். தென்னரசு அவர்கள் களம் காண்கிறார். அவருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இந்த வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 31ல் தொடங்கி நேற்று முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும் வேட்புமனுவினை வாபஸ் பெறுவதற்கான காலம் நாளை மறுதினம் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தலானது இம்மாதம் பிப்ரவரி 27ஆம் தெதி தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அடுத்தமாதம் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.YouTube video player

Exit mobile version