இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதற்காக 139 இடங்களில் 275 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலில் 344 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், 344 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 358 விவிபேட் இயந்திரங்களை வாக்கு சாவடி மையங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினரும், 3 கம்பெனி துணை ராணுவப் படையினரும் ஈடுபடவுள்ளனர். தேர்தலை ஒட்டி தொகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில், மக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்காக துணை ராணுவப் படையினர் கையில் துப்பாக்கியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

Exit mobile version