இடைத்தேர்தல் வாக்குப்பதிவு : டோக்கன் வழங்கி பொதுமக்கள் வாக்களிக்க அனுமதி

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதைச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு மற்றும் அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் கண்காணித்து வருகின்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மழை காரணமாக ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு தடைபட்டால், மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version