தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு முழுவதும் பெய்த மழையால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Exit mobile version