திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் டாவோ என்கிற நகர் அருகே 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் அதன் மைய பகுதியில் இருந்து தென்மேற்கு பகுதியில் 61 கிலோ மீட்டர் தொலைவில் மிண்டானோ தீவில், 28.2 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியிருந்தாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது.அங்குள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் இருந்து நீர் அலைபோல் எழுந்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Exit mobile version