சிங்கப்பூரில் 12-ம் தேதி தொடங்கும் வர்த்தக மாநாடு -பிரதமர் மோடி பங்கேற்பு

சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி தொடங்கும் வர்த்தக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக கருதப்படும் “சிங்கப்பூர் பின்டெக்” இம்மாதம் நடைபெற உள்ளது. வரும் 12-ம் தேதி தொடங்கும் இந்த மாநாடு 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.

டிஜிட்டல் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மோடி பேச உள்ளார் என்று பின்டெக் விழாவின் தலைமை அதிகாரி சோபேந்து மொஹந்தி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 514 பேர் நாடுகள் நிதிப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version