மாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கம்

மாதவரம் அடுக்கு மாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை மாதவரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை கடந்த 10-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்துக்கு ‘இண்டர்சிட்டி பஸ் டெர்மினல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாதவரம் புதிய அடுக்கு மாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மாதவரம் மாடி பேருந்து நிலையத்தில் இருந்து காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல மாதவரத்திலிருந்து கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

Exit mobile version