பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதி விபத்து- 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள kanmehdarzai அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில், இரண்டு வாகனங்களிலும் தீ பற்றி எரியத்தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளாக இரண்டு வாகனங்களும் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின. இதில் பேருந்து மற்றும் வேனில் இருந்த 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வேனில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட எண்ணெய் இருந்ததே, விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version