மாண்டியா அருகே கண்மாய்க்குள் கவிழ்ந்த தனியார் பேருந்து – பயணிகள் 30 பேர் உயிரிழப்பு

மாண்டியா அருகே கண்மாய்க்குள் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியாவை அடுத்த கனகனமுர்டி கிராமப் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்தது.

ஓட்டுநர் வெளியில் குதித்து தப்பிவிட்ட நிலையில், பேருந்தில் பயணித்த 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்தில் 35 பேர் பயணம் செய்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, கர்நாடக பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

 

 

Exit mobile version