தேசிய கொடி நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடம்

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண தேசிய கொடி நிறத்திலான ஒளிவிளக்குகளால் பிரகாசித்தது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

73வது இந்திய சுதந்திர தின விழா ஆகஸ்ட், 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, நேற்றிரவு, இந்திய மூவர்ண தேசிய கொடியின் நிறத்திலான எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசித்தது. வெள்ளிக்கிழமை இரவு 8.44 மணிக்கு இந்திய கொடி எல்.இ.டி., விளக்குகளால் பிரகாசித்தது. ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியாவை சேர்ந்தோர் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில் இந்திய தேசியக் கொடியின் வண்ணங்கள் ஒளிவிளக்குகளால் பிரகாசித்ததை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

Exit mobile version