கடை உரிமையாளரை மிரட்டி ரூ10லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  – குற்றவாளிகள் கைது

பர்மாபஜார் பகுதியில் கடை உரிமையாளரை மிரட்டி 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பர்மா பஜாரில் நசீர் என்பவர் கடை நடத்தி வருகிறார். நவம்பர் 1ஆம் தேதி கடையிலிருந்து 10 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அவர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் 4 பேர் ரஃபிக்கை கத்தியால் குத்தி விட்டு 10 லட்ச ரூபாயை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆராய்ந்ததில், பொன்னேரியைச் சேர்ந்த சதிஷ் மற்றும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கிஷோர் ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஷேக் தாவூத் என்பவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version