ஜல்லிக்கட்டுக்கு தயாராக காத்திருக்கும் காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர்கள் அதிகளவில் ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த கோவிந்தன், தலைமுறை தலைமுறையாக மாடு வளர்ப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார். ஜல்லிக்கட்டு காளைகளை தங்களின் சொந்த பிள்ளை போல் பாவித்து வளர்க்கும் இவர், தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற தயார் செய்துள்ளார்.

Exit mobile version