திண்டுக்கலில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயாராகும் காளைகள்

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெறும். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி, கொசவபட்டி, புகையிலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் காணும் காளைகளுக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே தீவிர பயிற்சி அளிக்கப்படும். அந்த வகையில் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல் மற்றும் மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளை விட தற்போது காளைகளுக்கு பருத்தி

Exit mobile version