பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாள் விழா சிறுவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

புலித்தேவனின் 304-வது பிறந்தநாள் விழாவினை நெல்லை நெற்கட்டும் செவலில் சிறுவர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த நெற்கட்டும் செவலில் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் இந்த தருணத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் புலித்தேவரின் நினைவு இல்லத்திற்கு வந்து அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து மாமன்னர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

Exit mobile version